
வடக்கு மாகாண அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் நடாத்தப்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலைய வருடாந்த கண்காட்சி 03.03.2021 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் மு.ப 9.15 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் தலைவராக எமது பிரதேச செயலாளர் திருமதி.சுபாஜினி மதியழகன் அவர்களும் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.நளாயினி இன்பராஜ் (பணிப்பாளர், வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம்) மற்றும் திரு,ந.பஞ்சலிங்கம் (மாவட்ட உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி திணைக்களம்) ஆகியோரும் கலந்து இவ் விழாவினை சிறப்பித்திருந்தனர்.
இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில...

















