நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமை கோட்டிற்குட்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு பிரதேச செயலக ஒழுங்குபடுத்தலில் உதவிப் பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன், LOLC தனியார் நிதி நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் சக்தி TV அனுசரனையுடனும் எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட புத்தூர் மேற்கு ( J/273 ) கிராம சேவையாளர் பிரிவின் கலைமதி கிராமத்தில் 60 பயனாளிகளுக்கும் மற்றும் புத்தூர் கிழக்கு(J/278) கிராமசேவையாளர் பிரிவின் ஊறணி கிராமத்தில் 100 பயனாளிகளுக்கும் தலா ரூபா 6000 பெறுமதியான உலர்உணவு பொதி இன்றைய தினம் 04.05.2022 காலை 9.00 மணியளவில் குறித்த நிறுவனத்தால் அந்தந்த கிராமசேவையாளர் பிரிவுகளில் வழங்கி வைக்கப்பட்டது.















