
வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது 11.06.2025 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் உயர் திரு சண்முகராஜா சிவஸ்ரீ அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது.
இக்கூட்டத்தில் கௌரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களும், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

















