
பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது 16.01.2021 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் கோப்பாய் பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முதல் நிகழ்வாக சமுர்த்தியின் சிப்தொர புலமைப்பரிசில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சமுர்த்தியின் சௌபாக்கிய வீட்டுத்திட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டது. தொடர்ந்து எமது பிரதேச செயலாளர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தலைமையுரை கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் பிரதேச செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலகத்தால் அடையாளம் காணப்பட்ட தேவைப்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட துறைகளின் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
வீடமைப்பு, இலங்கை மின்சார சபை, விளையாட்டுத்துறை, கைத்தொழில் துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, வீதி அபிவிருத்தி, உள்ளூர் ஆளுகை, நீர்வழங்கல் அபிவிருத்தி, மீன்பிடி அபிவிருத்தி மற்றும் விவசாய அபிவிருத்தி துறைகள் இதில் பங்கு பற்றினர்.
இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில
















