IMG 5310

பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது 16.01.2021 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் கோப்பாய் பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

முதல் நிகழ்வாக சமுர்த்தியின் சிப்தொர புலமைப்பரிசில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து  சமுர்த்தியின் சௌபாக்கிய வீட்டுத்திட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டது. தொடர்ந்து எமது பிரதேச செயலாளர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தலைமையுரை கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் பிரதேச செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலகத்தால் அடையாளம் காணப்பட்ட தேவைப்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இக் கூட்டத்தில் கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட துறைகளின் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

வீடமைப்பு, இலங்கை மின்சார சபை, விளையாட்டுத்துறை, கைத்தொழில் துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, வீதி அபிவிருத்தி, உள்ளூர் ஆளுகை, நீர்வழங்கல் அபிவிருத்தி, மீன்பிடி அபிவிருத்தி மற்றும் விவசாய அபிவிருத்தி துறைகள் இதில் பங்கு பற்றினர். 

இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில

2   3   4

5

 

News & Events

07
Sep2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
Aug2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
Aug2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
Aug2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »
Scroll To Top