
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் மெச்சுரை வழங்கல் நிகழ்வு எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் 04.03.2021 ஆம் திகதி நடைபெற்றது. இவ் நிகழ்வில் திரு.க.மகேசன் (மாவட்ட செயலாளர் - யாழ்ப்பாண மாவட்ட செயலகம்) மற்றும் திரு.ம.பிரதீபன் (மேலதிக மாவட்ட செயலாளர் - யாழ்ப்பாண மாவட்ட செயலகம்) ஆகியோர் பங்குபற்றி நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்காக அதிகளவான பயனாளிகளை இணைத்த உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்பட பிரதிகள் சில...















