கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாகக் கிராம அலுவலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வலி கிழக்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அச்சுவேலி போலிஸ் உத்தியோகத்தர்கள், 51வது வான்படை இராணுவத்தினர், பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள், பிரதேச சபை ஊழியர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள் மற்றும் பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள். இந் நிகழ்வில் முதலாவது நிகழ்வாக பிரதேச செயலாளரின் உரை இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து கிறீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் இணைப்பாளரின் உரையும் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியின் உரையும், பிரதேசத்தின் பிரஜாசக்தி தலைவரின் உரையும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வைத்திய தூய்மைப் படுத்தல் நிகழ்வானது இடம்பெற்றது.
<
<














