
எமது பிரதேச செயலகத்தில் 29.12.2021 ஆம் திகதி ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றது. இதில் இனிய விருந்தினராக அருட்பணி அருட்செல்வன் அவர்கள், பங்குத்தந்தை, புனித மிக்கேல் ஆலயம், உரும்பிராய் அவர்கள் பங்குபற்றி இந்நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக ஒளியேற்றல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு மற்றும் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து எமது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடந்து எமது பிரதேச செயலக பிரதேச செயலாளரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. இனிய விருந்தினரால் நத்தார் செய்தி மொழியப்பட்டது. தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களால் கரோல் கீதங்கள் இயற்றப்பட்டது. இறுதியாக கிறிஸ்மஸ் தாத்தா வருகை தந்து பரிசில்கள் வழங்கப்பட்டது. இறுதியாக நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.














