
பிறந்துள்ள சுபகிருது சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டிற்கான வேலை நாளின் ஆரம்பத்திற்காக இன்று காலை சுப நேரத்தில் 9.05 மணியளவில் எமது அலுவலகத்தில் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளரால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று தொடர்ந்து விசேட பூஜை வழிபாடு செல்வ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.
பிற்பகல் 1.30 மணியளவில் எமது பிரதேச செயலக வளாகத்தில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோலம்போடுதல், மாலை கட்டுதல், கிடுகு பின்னுதல், தேங்காய் திருவுதல், குருட்டு யானைக்கு கண் வைத்தல், முட்டி அடித்தல், நீர் நிரப்பிய பலூன் எறிந்து ஏந்துதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டு இந்நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது.