போதை தடுப்பு தொடர்பான பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடு 25.05.2022 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் J/281, பத்தைமேனி கிராம அலுவலர் பிரிவில் கிராம சேவையாளர் திரு.சி.பிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக திருமதி.அ.சியாமினி (தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இணைப்பாளர்) , திரு.W.A.S குமார (புனர்வாழ்வு அமைச்சின் யாழ் மாவட்ட இணைப்பாளர்) மற்றும் R.நிருஷா(புனர்வாழ்வு அமைச்சின் உத்தியோகத்தர்) கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது சிறுவர்கள், இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஆரோக்கியமான சிறுவர்களை கையாள்வது எப்படி, பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் பங்களிப்பு என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தெளிவூட்டப்பட்டது.