பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கலந்துரையாடல் பிரதேச செயலாளர் தலைமையில் 28.09.2022 ஆம் திகதி காலை 10 மணியளவில் புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோப்பாய் கோட்ட மட்ட அதிபர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர்(முறைசாராப் பிரிவு), சிறுவர் இல்லங்களின் முகாமையாளர், தொழிற்திணைக்கள அலுவலர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.