பாத்தீனிய களைக்கட்டுப்பாட்டு தினமான நேற்று (30.06.2026) எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட J/262 ,J/ 263, J/ 264,
J/265 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் பாதீனியக் களைக் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1) கோப்பாய் வடக்கு (J/262 ) :- சரவணபவானந்தா பாடசாலை வீதி
2) உரும்பிராய் மேற்கு (J/263 ) :- யா/உரும்பிராய் சந்திரோதயா வித்தியாலயம்.
3) உரும்பிராய் வடக்கு (J/264 ) :- அண்ணமார் கோவிலடி வீதி.
4) உரும்பிராய் தெற்கு (J/265 ) :-சேமப்புல வீதி , யோகபுர முன்பள்ளி.
இந்நிகழ்வானது காலை 8.00 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின் போது சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மருத்துவர் (சித்த), கிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி சமூக அபிவிருத்தி சபை தலைவர்கள், உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்புக்கள், விவசாய போதனா ஆசிரியர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பாதீனிய களை அகற்றும் நடவடிக்கையை முறையாக மேற்கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள்.

1 1 11

News & Events

07
Sep2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
Aug2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
Aug2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
Aug2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »
Scroll To Top