


B3S மென்பொருளில் தரவுகளை பூரணப்படுத்திய கிராம அலுவலர்களுக்கு மெச்சுரை வழங்கல் நிகழ்வு இன்று (09.08.2022) எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆவரங்கால் கிழக்கு (J/276) கிராம அலுவலர் திருமதி. நிஷாந்தன் பிரியதர்சினி அவர்களுக்கு பிரதேச செயலாளர் அவர்களினால் மெச்சுரை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.





வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் IOM நிறுவனத்தினால் அச்சுவேலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் “பாதுகாப்பான புலம்பெயர்வு” தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 24.05.2022 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.


அலுவலக புதிய சிற்றுண்டிச்சாலை பால் காய்ச்சும் நிகழ்வு இன்று(04.05.2022) ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.















