<
நேர்மையான அரச சேவைக்கான "நேர்மை கலாசாரம் -கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய செயல் திட்டத்தின் முதலாம் நாளான இன்று (2026.07.27) நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள் "சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை" என்ற தொனிப்பொருளில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.ஈ .தயாரூபன் அவர்களால் தேசியக்கொடியானது ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.. தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் எடுத்தனர் அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் நேர்மைக் கலாசாரம் என்ற தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களுக்கான உரையாற்றப்பட்டது. இன்றைய நாள் நிகழ்வுகளின் பதிவுகள் சில...
<
<
<
வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் பிரதேச தொழிற்துறைத் திணைக்கள உத்தியோகத்தர் ஒழுங்கமைப்பில் உரும்பிராய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் 14.07.2026, 17.07.2026 ஆகிய இரு நாட்கள் காலை 9.00 மணி தொடக்கம் 3.00 வரை உணவு உற்பத்தி பயிற்சி நெறியானது சிறப்பாக நடைபெற்றது. உரும்பிராய் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் பிரதேச தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வின் வளவாளராக மாவட்ட விதாதா உத்தியோகத்தர் திருமதி கோமதி மாயக்கிருஷ்ணன் ( விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அப் பிரிவு கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச விதாதா வள நிலைய உத்தியோகத்தர் மற்றும் 12 தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இத் தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சி நெறியில் கச்சான் அலுவா, எள் அலுவா, சோளன்மா தொதல், பூந்தி, பனீர், அரிசி சேர் மிக்சர், அரிசி சேர் ரொபி போன்ற பலவகையான உணவு உற்பத்திக்கான பயிற்சிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
<
தேக ஆரோக்கிய தினத்தையொட்டி (24.07.2026) பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான நடைப்பவனியும், உடற்பயிற்சிகளும் இடம்பெற்றது.
<
<
<
<
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் கோப்பாய் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய Empower Youth Programme ஆனது 17.07.2026 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளுக்கு CV writing and Interview Behaviours தொடர்பான பல விடயங்களானது செயல் முறைப்பரீட்சைகளுடன் மாவட்ட செயலக மனிதவள வேலைவாய்ப்புத்திணைக்கள இணைப்பாளர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது......
<














