வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் யாழ் மாவட்டத்திற்குட்பட்ட நெசவுப் போதனாசிரியர்கள், நெசவாளர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் பயிற்றுவிப்பாளர் கள்(TOTs) போன்ற 20 பங்குபற்றுனர்களுக்கு Norway design நெசவு தொடர்பான விசேட பயிற்சியானது கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுப்பிட்டி நெசவு நிலையத்தில் பிரதேச தொழிற்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பமாகி 4 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இப் பயிற்சி கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பயிற்றுவிப்பாளர் குழாமினால் வடிவமைக்கப்பட்டு சிறப்பான வகையில் பயிற்சியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
<
<
மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் 2026 ம் ஆண்டு மாகாண குறித் தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) வேலைத்திட்டத்தின் கீழ் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் உரும்பிராய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் 07.07.2026, 08.07.2026 ஆகிய இரு நாட்கள் காலை 9.00 மணி தொடக்கம் 3.00 வரை பப்பட உற்பத்தி பயிற்சி நெறியானது சிறப்பாக நடைபெற்றது. உரும்பிராய் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் பிரதேச தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வின் வளவாளராக மாவட்ட விதாத உத்தியோகத்தர் திருமதி கோமதி மாயக்கிருஷ்ணன் (விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அப் பிரிவு கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் 25 தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இத் தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சி நெறியில் சாதாரண பப்படம், மிளகு பப்படம், சீரக பப்படம், முருங்கை கீரை பப்படம், சங்குப்பூ பப்படம் போன்ற பலவகையான பப்படங்கள் உற்பத்திக்கான பயிற்சிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
<
நம்மில் பலர் சாலையோரங்களிலும், காலி மனைகளிலும் வெள்ளை நிற குட்டிப் பூக்களுடன் பச்சைப்பசேலென வளர்ந்து நிற்கும் இந்தப் புல்லைப் பார்த்திருப்போம். இதன் பெயர் பாத்தீனியம் (Parthenium hysterophorus). பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இது ஒரு மிக மோசமான விஷச்செடி!
இதன் ஆபத்துகள் தெரியாமல் நாம் இதை அப்படியே விட்டுவிடுகிறோம். இதனால் ஏற்படும் பாதிப்புகள் இதோ:
❌ மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:
இதன் மகரந்தத் தூள் காற்றில் பரவி நமக்கு ஆஸ்துமா, தொடர் இருமல், சளி மற்றும் கடுமையான தோல் ஒவ்வாமையை (Dermatitis) ஏற்படுத்தும். செடி உடலில் பட்டால் அரிப்பும் தடிப்பும் உண்டாகும்.
❌ கால்நடைகளுக்கு ஆபத்து:
ஆடு, மாடுகள் இதை அறியாமல் மேய்ந்தால் அவற்றின் வாயில் புண்கள் ஏற்படும். பாலின் சுவை கசப்பாக மாறும். சில சமயங்களில் கால்நடைகளின் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.
❌ விவசாயத்தின் எதிரி:
நிலத்தின் மொத்த சத்தையும் உறிஞ்சி, மற்ற பயிர்களை வளர விடாமல் அழித்துவிடும் குணம் கொண்டது.
💡 இதை எப்படி ஒழிப்பது?
1️⃣ பூப்பதற்கு முன் பிடுங்குங்கள்: இச்செடி பூத்துவிட்டால் இலட்சக்கணக்கான விதைகளை காற்றில் பரப்பிவிடும். எனவே பூப்பதற்கு முன்பே வேரோடு பிடுங்கி அழிக்க வேண்டும்.
2️⃣ பாதுகாப்பு முக்கியம்: இந்தச் செடியை பிடுங்கும்போது வெறும் கைகளால் தொடக் கூடாது. கண்டிப்பாக கையுறை (Gloves) மற்றும் முகக்கவசம் (Mask) அணிந்து கொள்ள வேண்டும்.
3️⃣ உயிரியல் முறை: 'சைகோகிராமா' (Zygogramma bicolorata) என்ற மெக்சிகன் வண்டுகள் இந்த பாத்தீனிய இலைகளை மட்டுமே சாப்பிட்டு அழிக்கும் தன்மை கொண்டவை.
நம் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்! ♻️🌱

















