
மாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு எமது பிரதேச அலுவலர்களுக்கான ஒரு நாள் முதலுதவி மற்றும் உயிர் பாதுகாப்புப் பயிற்சிப்பட்டறை எமது பிரதேச மாநாட்டு மண்டபத்தில் (2019.11.11) திங்கட்கிழமை நடை பெற்றது.


இன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு பற்றியோருக்கான (2019.10.17 - 2019.10.24 வரை) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


விசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் விசேடதேவையுடையோருக்கான (ஆண் பெண் இருபாலருக்குமான)விளையாட்டுப் போட்டி 'அணுகக்கூடிய எதிர்காலம் ' என்னும் தொனிப்பொருளில் நடைபெற்றது. இவ் போட்டியில் முச்சக்கர வண்டி ஓட்டம், பலூன் ஊதி உடைத்தல், வேகநடை,100M ஓட்டம், நீர் நிரப்புதல் போன்றன நடைபெற்றன.


அச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி வங்கியின் அனுசரனையுடன் 'தேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி' (பன்னீர், திரவச்சவர்க்காரம்) மனிதவளஅபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விதாதவள நிலையம் இணைந்து (21.10.2019) திங்கட்கிழமை நடாத்திய போது.















