
எமது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட பிரிவுபசார விழா 29.01.2021 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2 மணியளவில் எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் எமது அலுவலகத்தில் கடமைபுரிந்து கடந்த ஆண்டு ஓய்வூதியம் பெற்ற அலுவலர்களையும் மற்றும் ஏனைய பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற அலுவலர்களையும் கௌரவிக்கும் முகமாக இந்நிகழ்வு நடைபெற்றது.
இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில










பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது 16.01.2021 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் கோப்பாய் பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முதல் நிகழ்வாக சமுர்த்தியின் சிப்தொர புலமைப்பரிசில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து சமுர்த்தியின் சௌபாக்கிய வீட்டுத்திட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டது. தொடர்ந்து எமது பிரதேச செயலாளர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தலைமையுரை கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் பிரதேச செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலகத்தால் அடையாளம் காணப்பட்ட தேவைப்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட துறைகளின் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
வீடமைப்பு, இலங்கை மின்சார சபை, விளையாட்டுத்துறை, கைத்தொழில் துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, வீதி அபிவிருத்தி, உள்ளூர் ஆளுகை, நீர்வழங்கல் அபிவிருத்தி, மீன்பிடி அபிவிருத்தி மற்றும் விவசாய அபிவிருத்தி துறைகள் இதில் பங்கு பற்றினர்.
இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில


அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கருத்தரங்கு முறையே 01.12.2020, 02.12.2020 ஆம் திகதிகளில் எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வளவாளர்களாக Mr.W.G.W.Gnanadayalan, Assistant Commissioner of Elections, Kilinochchi District (ஓய்வூதியம்) and Mr.R.C.Amalraj, Assistant Commissioner of Elections, Jaffna District (ஒழுக்காற்று நடவடிக்கை) கருத்தரங்கை மேற்கொண்டனர்.
இது தொடர்பான சில புகைப்பட பதிவுகள்


2021 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல் வைபவத்துடன் இன்று (01.01.2021) காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. தொடர்ந்து உத்தியோகத்தர்களின் உறுதியுரையும், அதனை தொடர்ந்து பதவிநிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்துரையும் தொடந்து குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரின் கோவிட் 19 தொடர்பான விழிப்புணர்வும் இறுதியாக எமது அலுவலக உத்தியோகத்தர்களின் அனுபவ பகிர்வும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவேறியது.
இந் நிகழ்வு தொடர்பான பதிவுகள் சில...


எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.10.2020 செவ்வாய்க்கிழமை அன்று எமது பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழாவின் பரிசளிப்பு விழா திருமதி. ராதிகா சன்சீவன் (உதவி பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம், கோப்பாய்) தலைமையில் பி.ப 3.00 மணியளவில் நடைபெற்றது.
அந் நிகழ்வின் பதிவுகள் சில...


















