நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமை கோட்டிற்குட்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு பிரதேச செயலக ஒழுங்குபடுத்தலில் உதவிப் பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன், LOLC தனியார் நிதி நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் சக்தி TV அனுசரனையுடனும் எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட புத்தூர் மேற்கு ( J/273 ) கிராம சேவையாளர் பிரிவின் கலைமதி கிராமத்தில் 60 பயனாளிகளுக்கும் மற்றும் புத்தூர் கிழக்கு(J/278) கிராமசேவையாளர் பிரிவின் ஊறணி கிராமத்தில் 100 பயனாளிகளுக்கும் தலா ரூபா 6000 பெறுமதியான உலர்உணவு பொதி இன்றைய தினம் 04.05.2022 காலை 9.00 மணியளவில் குறித்த நிறுவனத்தால் அந்தந்த கிராமசேவையாளர் பிரிவுகளில் வழங்கி வைக்கப்பட்டது.


பிறந்துள்ள சுபகிருது சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டிற்கான வேலை நாளின் ஆரம்பத்திற்காக இன்று காலை சுப நேரத்தில் 9.05 மணியளவில் எமது அலுவலகத்தில் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளரால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று தொடர்ந்து விசேட பூஜை வழிபாடு செல்வ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.


வரவு செலவுத் திட்டத்தில் "ஒரு இலட்சம் பணிகள் "அங்குரார்ப்பண நிகழ்வுக்கான முன்னாயத்தங்கள் தொடர்பான தெளிவூட்டும் கலந்துரையாடல் 02.02.2022 ஆம் திகதி எமது பிரதேச செயலகத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்,அலுவலர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகள் கலந்து கொண்டனர்.
வீதிப் பாதுகாப்பு பயிற்சிப்பட்டறையானது எமது பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு 22.03.2022 ஆம் திகதி நிகழ்த்தப்பட்டது.















